Thursday, October 7, 2010

ஏன் இந்தப் பிறவி...!!

பிரபஞ்ச வெடிப்பில்
எரியும் நெருப்பில்
பூகோளப் பிறவி...

 
ஒற்றைத் துளியில்
ஆயிரக் கொலைப் பின்
உயிரணுப் பிறவி...


மரணக் கிடப்பில்
மயங்கிய தாயவள்
மடியினில் பிறவி...



அங்கக் களிப்பில்
பேதை அணைப்பில்
அடுத்தொரு பிறவி...



நிம்மதி தொலைப்பில்
பொருள் பல தேடி
நித்தமும் பிறவி...



இதயத் துடிப்பில்
சிந்தனைத் தெறிப்பில்
எழுத்துப் பிறவி...

  
எட்டுக் கால் நடையில்
எங்கோ பயணம்
ஏன் இந்தப் பிறவி...!!
 
 
 
அன்புடன்
 
ஜெகதீஸ்வரன். இரா
 


4 comments:

  1. பிறவியை நொந்து நால்வர்
    தோளில் நடப்பதே மாயை!

    உங்கள் கவிதை மிகவும் அருமை !
    தமிழின் உயர்வு உங்கள்
    எழுத்தில் பரிணமிக்கிறது!
    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. @rmkgreat said...
    தங்களின் மேலான கருத்துக்கு நன்றி தோழா

    ReplyDelete
  3. இனிமையான எழுத்துக்கள்..அழுத்தமான சிந்தனைகள்..அருமை.

    ReplyDelete
  4. தங்கள் உரைக்கு நன்றி நண்பா!

    ReplyDelete