Thursday, June 23, 2011

என்ன செய்தோம்..!!


அண்டிப் பிழைப்பதில்லை
நமது நிலை,
மண்டியிட்டு மாள்வதில்லை
தமிழர் தலை;

ஏக்காளமிடும் எதிரிகள் கூட்டம்,
துகிலுரிக்கும் துரோகிகள் கூட்டம்;

தலைவிரிக் கோலமாய்
தாயவள்,
கதறல் சத்தம் தெருவெங்கும்...
தாயின் பிணமருகே..
தாய்ப்பாலுக்காய்
குழந்தைகளின் அலறல் சத்தம்..!!

வடநட்டான் என்செய்வான்
வாய்க்கரிசி இயைதனையே..
தென்னாட்டான் சிதைமூட்டி
கூட்டுக் கொள்ளி பொருத்தியனே..!!

தாய் தமிழினம் சிதறிடுமே
தரிகேட்ட தலைவர்களால்...
எழுந்திடடா என் தோழா
இலக்கென்ன தெரிந்ததடா…!!!

புரட்சியின் வாளெடு
பணப் பேய்கள் ஓட்டவே..
புரட்சியில் தோள்கொடு 
புது வலிமை காட்டவே..!!