Thursday, October 21, 2010

அங்கலாய்த்துக் கொண்ட மைனாக்கள்

















அகண்ட சாலைகள்
அனல்பறக்கும் வாகனங்கள்

அவசரப் பயணம்...

அலறியடித்து ஓடும்
மனிதக் கூட்டம்,


சிவப்பில்
ஒரு கூட்டம் அடைபட,
பச்சையை நோக்கி
பாயும் ஒரு கூட்டம்


ஒருவன் தவறினால்
இன்னொருவன் தாறுமாறாய்;

இதில் காதைக் கிழிக்கிற
சத்தம் வேறு...


எதைத் தேடி இவர்கள் ஓட்டம்;
எதற்க்காக இந்த அவசரம்;
என அங்கலாய்த்துக் கொண்டன..
அந்த சிக்னல் கம்பத்தில்
அமர்ந்திருந்த மைனாக்கள்..!! 



ஏன் மனித மனம் பொருள் தேடலிலேயே
வெந்து சாக வரம் பெற்றது...??


 

வாழிய தாய்த் தமிழ்
அன்புடன்
ஜெகதீஸ்வரன்,இரா
 

1 comment:

  1. உண்மைலேயே ரொம்ப அருமையா இருக்குங்க ..!!
    கலக்கல் ..!!

    ReplyDelete