Saturday, October 16, 2010

தனிமை..

















நிதர்சனம் புரிந்து
மாறிய அவள் வழி..
நீங்கா
தனிமையினூடே
நீளும் என்வழி..

சிந்திக்க வைத்த
தனிமை
வரமாய் நிற்க்க,
சிதறடித்த
தனிமை சாபமிட..

இலக்கென
அவளைத் தேடித்
தொலைந்தது,
இலக்கணப்
பிழையாய் போன
வாழ்வு...

விளக்கென
வெளிச்சம் தந்து
அவள்
விழுங்கிச் சென்ற
இரவுகள் இன்று
இரவல்களாய்...!!

பாசத்துடன்
பாதங்கள் முத்தமிட்ட
தாய்மண் தொலைத்து,

பாவங்கள் முற்றுகையில்
பாலைமண் நுழைந்து,

என்னுள் வாழ்ந்திடும்
என்னவள்
நினைவுகளால்,
எத்தனை இரவுகள்
இப்படி நீளுமோ....??



வாழிய தாய்த் தமிழ்

அன்புடன்
ஜெகதீஸ்வரன்.இரா

No comments:

Post a Comment