Friday, July 8, 2011
புரட்சி செய்...!!
புது இரத்தம் பாய்ச்சுவோம்
யுத்தக் கொடியினை ஏற்றுவோம்..
இளைய படையென கூடுவோம்
தோள் வலிமையை காட்டுவோம்…
நினைவில்
வறியவர் இழிநிலை நிறுத்தி;
முட்டி மோது இலக்கை தெறித்து,
விழும் வேகம் தேக்கிடு
எழும் உயரம் நீட்டவே….
நாம்…
அன்பின் காலுக்கு செருப்பு
அடக்கும் காலுக்கு நெருப்பு
தலை நிமிர்ந்தே நடந்திடல் சிறப்பு
என்றும் நிமிர்ந்தே எரியும் நெருப்பு…
தோழா…
அழுதிடும் ஈனக் குரல் எரித்து
எழுந்திடு புரட்சிக் குரல் தரித்து…
காற்றினில் தூசாய் இரு
எதிரியின் கண்ணுள் விழு..
அட…
கொடுத்துப் பெறுவது இரவலடா
கொள்கையில் நிற்பது உரிமையடா
கொள்ளையர் விரட்டிடல் கடமையடா
நீதி வேண்டில் செய்திடு கிளர்ச்சியடா….
என்றும்…
புரட்சி செய்திடு புது உலகம் பிறக்கவே
அதிலே நிலைத்திடு நன்நிலையில் சுழலவே
புரட்சி செய்திடு புது இரத்தம் பாய்ச்சவே
அதிலே நிலைத்திடு அதன் ஓட்டம் நிகழவே…
வாழிய தாய்தமிழ்
அன்புடன்.
ஜெகதீஸ்வரன்.இரா
Subscribe to:
Post Comments (Atom)
போய் புரட்சி செய்ய வேண்டியதுதானே ??
ReplyDeleteஎன்ன தாமதம்?