மது அருந்தி
மதி பிறழ்ந்து,
மானம் கெட்ட
மனிதர் கூட்டம்...
விழி திறந்து
நிலை அறிந்து,
ஊனம் உற்ற
சட்ட திட்டம்...
எழும் தமிழர்
விழும் நிலையம்;
வீதி வழி
ஆட்டம் பாட்டம்...
முறுக்கேறிய
நரம்பறுத்து,
சரக்கேற்றும்
இளைஞர் கூட்டம்...
பிணியுடனே
பத்தினியாள்,
பிள்ளையரும்
பட்டினிப் போராட்டம்...
ஆல்கஹால்
அனுக் கசிவால்
சிந்தனையின்
சதுராட்டம்...
கண் இழந்து
குடல் அறுந்து
சாவைக் காண
தள்ளாட்டம்…!!!
***********************************************************
வாழிய தாய்தமிழ்
அன்புடன்
ஜெகதீஸ்வரன்.இரா
கவிதை நல்ல இருக்கு யேகதிசா ஏன் எங்கட வாயில அடிக்குரியல் கவிதை எழுதுங்க பட் எங்கள பற்றி எழுத வேணாம் எவளவு கஸ்ரபட்டு குடிக்குறோம் தெரியுமெல்ல உந்த படத்த பாருங்க உந்த கியுவில நின்னு வேண்டி குடிக்குற சாதாரண விஷயம் இல்ல
ReplyDeleteம்ம்ம் அருமை நண்பா
ReplyDeleteஉங்களின் வரிகளின் வேட்கையிலாவது சில நன்மை மனிதர்கள் திருந்தட்டும்
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
உங்களுக்கு தளம் இருப்பது எனக்கு தெரியாது
உங்களுடன் என்னை இனைத்துக் கொண்டேன்
அருமையான சந்தக் கவிதை வரிகள் .
ReplyDeleteமிகவும் அர்த்தப்படத் தொடுத்துள்ளீர்கள் .
வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு .....