Sunday, April 10, 2011

நவீன தொழில்நுட்பத்தில் நாதியற்று நாம்…!!

கடிதத்திற்க்காய் காத்திருந்து
எதிர்பார்ப்புகளில் ஏங்கித்தவித்த
தருணங்கள் மறந்து,
வந்து விழுகிறது
வார்த்தைகளற்ற
மின்னஞ்சல்

முத்தங்கள் அனைத்தும்
சத்தங்களாய்
பறிமாறிக் கொள்கின்றன,
கம்பி வழி தொலைபேசியினூடே...

பெற்ற குழந்தையை
Webcam வழி காட்டி
அதன் இடத்தை ஆக்கிரமிக்கும்
மடிக்கணிணி

முகம் பார்க்க துடித்து
தூதுவிட்ட
காதலின் கண்ணீர்;
காற்றலைகளில்
கசிந்து விழுகிறது
I Miss You என்ற
குறுஞ்செய்தியாக

உணர்வுகள்
சொற்களாய் பிறந்து
செயலாய் வளரும் முன்,
செய்து முடிக்கின்றன
மின்னனு சாதனங்கள்,
என் சிந்தனையை
முடக்கி…!!

இறுக மூடிய
வீட்டின் சன்னலின் வெளியே
தென்றல் சிறைபட
சுதந்திரமாய் நான் மட்டும்,
A/C அறையெனும் உலகத்தில்,

காற்றுபுகாத காரினுள்
காதை கிழிக்கும்
பாட்டுச் சத்தம்
வீரனாய் விரைகிறேன் வேலைக்கு;
அட அடிமையே என
ஏளனம் செய்தது
அந்த சாலையோர
மலர்ச் செடி

தொழில்நுட்பங்களின்
உச்சத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
இயல்பான
வாழ்க்கை தொலைத்து..!!


வாழிய தாய்தமிழ்
ஜெகதீஸ்வரன்.இரா

1 comment: