Monday, March 21, 2011

வெற்றிடம் நோக்கி வேகமாய் விரைகிறேன்..!!


எங்கோ பிறந்த மெளனத்தின்
இங்கே தொலைகிறேன்
விழுந்து தெரிக்கும்
கண்ணீர் துளி
தவழ்ந்து சிரிக்க;
சுற்றும் உலகச்
சுழற்ச்சியுனூடே
உயரே பறக்கிறேன்..!!

இரவல் பெற்றே
வாழத் தவித்த
இதயத் துடிப்பில்,
ஓசையற்ற ஒற்றைச் சத்தம்
உயிரைத் தீண்ட;
அதை தேடித் தவிக்கும்
இருளின் மாயையில்
தொலைந்தே போகிறேன்..!!

நினைவுகள் பிணமென எரியும்
மனதின் கல்லறையில்,
வாடித் தவிக்கும்
மெளனப் பூக்கள்
அஞ்சலி செலுத்த;
அதன் வளமை நிலைக்க
நிம்மதியற்று
நித்திரை தொலைக்கிறேன்..!!
 
உரசும் காற்றினூடே
கடைசி பிம்பம்
மெல்லமாய் மறைய;
அதன் துகள்கள்
தூக்கி வீசப்பட்ட
வெற்றிடம் நோக்கி
வேகமாய் விரைகிறேன்..!! 

விழி வழி பயணித்த
நெருப்பில்,
உருகித் தவித்த
எண்ணக் குவியல்;
இறுதி வாயிலில்
நிலைநிற்க நினைத்து
கடைசிச் சுடராய் 
கையறு நிலையில்,
அனைந்தே போகிறேன்..!!


வாழிய தாய்தமிழ்
ஜெகதீஸ்வரன்.இரா

3 comments:

  1. எளிமையான தமிழில் அருமையாக உள்ளத இக்கவிதை...
    ஐடம் இருந்தா வாங்க..
    http://sakthistudycentre.blogspot.com/2011/03/2_21.html

    ReplyDelete
  2. வணக்கம் உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்

    நன்றி

    ReplyDelete