Tuesday, March 8, 2011

ஒரு தீக்குச்சி என்ன செய்யும்…??

ஒரு இளைஞனின் தியாகம்                                  தவறுகள் இருப்பின்
தலைமையற்ற மக்களின் எழுச்சி                                தயவு கூர்ந்து
மாற்றம் என்ற ஒற்றைச் சொல்                                சுட்டிக்காட்டவும்.
புரட்சி என்ற ஒற்றை ஆயுதம்
ஆட்டம் காணும் வல்லாதிக்கம்,
புலம் பெயரும் அடக்குமுறை
புதியதோர் சமுதாயம்..!!

உன்மையான சுதந்திரம் என்பது போராடிப் பெறுவது என்னும் தலைவர்களின் கூற்று கண்முன்னே அறங்கேறிக் கொண்டிருக்கிறது.

2011 தொடக்கம் முதல் பற்றி எரிந்து கொண்டிருக்கும் துனிசியா, எகிப்து, லிபியா, அல்சீரியா, பக்ரைன், ஓமன், ஏமன், உக்ரைன் மக்கள் காலையில் கூடி மாலையில் கலைந்துவிடவில்லை, கடமைக்காக முழக்கமிடவில்லை, சொந்த ஆதாயம் தேடி சொல்லாடல் இல்லை, உணர்ச்சிக் குவியலில் குளிர்காயவில்லை.... நாட்டின் தேவைக்காக, தன் எதிர்கால தலைமுறையின் தேவைக்காக, வறுமையை எரிப்பதற்க்காக, சுதந்திர காற்றை சுவாசிக்க, பிறந்த குழந்தை முதல் இறக்கும் மூதாட்டி வரை களம்கான்கிறார்கள்

வரலாற்று பதிவுகள் பிரெஞ்சு புரட்சி முதல் சிப்பாய் புரட்சி வரை விவரித்தாலும், ஒரு எழுத்தாக்கம் கொண்ட கட்டுரைகளாக மனனம் மட்டுமே செய்ய தெரிந்த நமக்கு சமகால மத்திய கிழக்காசிய நாடுகளில் நடக்கும் புரட்சி, அடிமைத்தனத்தை எதிர்க்கும் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மிகப்பெரியதோர் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை

புணரத் துடிக்கும் ஏகாதிபத்தியம் ஒருபுறம், கண்கட்டி கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க பழகிய ஐக்கிய நாடுகள் சபை ஒருபுறம், மறுகாலனி ஆதிக்கத்திற்க்கு வழிவகுக்கும் ஐரோப்பிய (நிறுவனங்களின்) ஒன்றியம் ஒருபுறம், மற்றொரு இராசபக்சேவாக உருவாகி நிற்க்கும் லிபியாவின் கடாபி போன்ற சர்வாதிகாரிகள் ஒருபுறம், மாற்றத்தை விரும்பி மரண வாயிலில் நிற்க்கும் சாமான்ய மக்கள் மறுபுறம்.. இவர்களின் நடுவே பிறந்ததை தவிர வேறொன்றும் செய்யதிடாத இது போன்ற குழந்தை எரியுண்டதைப் பார்க்கும் போது, உடன் பற்றி எரிகின்றது நம் நெஞ்சமும். அடக்குமுறைகளின் ஆணிவேரைத் தேடி அறுத்தெரிய புறப்படத் துணிகின்றது அடங்கமறுக்கும் மனம்.


பிறந்தால் தமிழ் பேசும் என்று எத்தனை பச்சிளம் குழந்தைகள், இந்திய ராடார் காட்டிய பாதையில் பயணித்த சிங்களக் காடையர்களின் குண்டுகளில் தாயின் கருவறையிலேயே இதுபோன்று சிதைக்கப் பட்டிருப்பார்களோ என நினைக்கையில் இயலாமையின் உச்சத்தில் இடியென நெஞ்சம் சிதறுகிறது.

சமகால நடைமுறைகளைப் பார்க்கையில் ஒன்று மட்டும் தெளிவாகின்றது,

புரட்சிக்கு கொடுக்கும் உயிர் அரிது,
அதற்க்கு அந்த புரட்சி கொடுக்கும் விலை பெரிது

இதை பாரதிதாசன் மிக எளிய தமிழில் விட்டுச் சென்றார்..



  • ஆட்சி மாற்றம் நிகழ்ந்து 60 ஆண்டுகளுக்கு மேல்,
  • மாறி மாறி ஆளும் திராவிடக் கட்சிகள்
  • துரோகம் செய்து பழகிப்போன தேசியக் கட்சி
  • தொலை நோக்கு சிந்தனையற்ற அரசின் திட்டங்கள்
  • முடங்கிக் கொண்டிருக்கும் சிறுதொழில்கள்
  • தன்நிறைவற்ற உற்பத்தி
  • பன்னாட்டு நிறுவனங்களின் சந்தைகளாக பார்க்கப்படும் மக்கள்.
  • அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் என்னற்ற கிராமங்கள்.
இன்னும் பல...... இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை.!
இதை மறுப்போர் யாரேனும் உண்டா..??  

அரிதார அழகிகள், கலைக் கூத்தாடிகளின் கேளிக்கைகளில் மயங்கி, அரசியல்வாதிகளின் வாய் பார்த்து வாழப்பழகிய கூட்டமாகிப் போன தமிழகத்தில் புரட்சியும் புரோட்டாவும் ஒரே விலையா..?? எனக்கூட கேட்க்கும் தலைமுறை உருவாகிவிடுமோ என எண்ணங்கள் எழுவதிலும் ஐயமில்லை
 
அரசியல் மேடைகள் தோறும் பதாகைகளில் படமாகிப் போன தமிழக தியாக மறவர், தமிழர்களை அறிவாயுதம் ஏந்தச் சொல்லி உயிராயுதம் ஏந்தியதும் ஒரு தீக்குச்சி..

துனிசிய நாட்டின் ஆட்சி அதிகாரத்தியே புரட்டிப்போட்டு இன்று மத்திய கிழக்கு நாடுகள் முழுதும் பரவிக்கிடக்கும் புரட்சியும் ஒரு தீக்குச்சி..   

அடுத்தகட்ட மாற்றம் அவரவர் கைகளில்.!!

வாழிய தாய் தமிழ்
ஜெகதீஸ்வரன்.இரா

1 comment:

  1. Really good thought and while studying itself I feel how worst we are and how expert we are in speaking about our old generation only.

    For every one we are reading many stories like this every day in our life if we are not thinking THE TRUTH about THIS STORY and our feature now, the above same story will read by others but the TOPIC ,,,,,will be TAMILNADU.

    Think now about our next generation
    save the nation for the feature.

    ReplyDelete