Tuesday, February 22, 2011

நீளும் பயணங்களில்..!!



நீளும் பயணங்களில்
நிஜத்தை தொலைக்கிறேன்,
நிலையற்ற வாழ்வில்
என்னை தொலைக்கிறேன்,       
ஓரறிவுப் புல்லும்
புத்துயிராய் பிறப்பெடுக்க;
உன்னை தொலைத்த
நான் மட்டும் ஏன்..
ஓசையின்றி
மரணித்துக் கொண்டிருக்கிறேன்..?? 

********************




என் அத்தனை வலியையும்
உன்னைப் பார்த்ததில் மறந்தேன்
ஆனால் அதைவிட கொடுமையை
உன்னைப் பிரிந்ததில் உணர்ந்தேன்..!!  

********************
 

ஒவ்வொரு முறையும்
தோற்றுப் போகிறேன்..
உன் மெளனத்தின்
வெற்றியால்..!! 

*********************




வாழிய தாய் தமிழ்
அன்புடன்
ஜெகதீஸ்வரன்.இரா

4 comments:

  1. //ஓரறிவுப் புல்லும்
    புத்துயிராய் பிறப்பெடுக்க;
    உன்னை தொலைத்த
    நான் மட்டும் ஏன்..
    ஓசையின்றி
    மரணித்துக் கொண்டிருக்கிறேன்..?? //

    வலி உணரமுடிகிறது உணர்ந்திருப்பதால்..

    ReplyDelete
  2. @ தமிழரசி..
    வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  3. வலியை ஒவ்வொரு வரியும் தருகிறது
    அருமை ஜெகதீஸ்வரன்

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  4. படத்தில் நுனியில் அமர்ந்த கவிஞனின் போலவே... கவிதைகளும் நுனிக்கு அழைக்கின்றன.

    ReplyDelete