Saturday, December 4, 2010

நவீன சேகுவேரா விக்கி லீக்ஸ்


கனரக ஆயுதம் இல்லை, சிதறடிக்கும் போர்த் தந்திரங்கள் இல்லை, கூட்டம் கூட்டமாய் கிளம்பிவரும் படையணியினர் இல்லை அனாலும் இந்த அமெரிக்கா உறக்கம் தொலைத்து பின்னங்கால் பிடரியில் அடிக்க அங்கும் இங்கும் ஓடி, வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.

1960களில் சேகுவேரா என்ற பெயரை கேட்டாலே அலறியடித்து ஓடிய அமெரிக்கா, இன்று விக்கிலீக்ஸ் என்றாலே அதே நிலையை உணர ஆரம்பித்திருக்கும்.

அமெரிக்கா மட்டும் அல்ல அனைத்து வல்லாதிக்க நாடுகளும்தான்.

ஆம் அவர்களே எதிபார்த்திருக்க மாட்டார்கள் இப்படி இணையத்தால் சேகுவேரா ஒருவன் வருவான் என்று. உலகின் அனைத்து நாடுகளிலும் தன் மூக்கை நுழைத்து மெல்ல மெல்ல தன் காலை பதிக்கும் ஏகாதிபத்தியத்தின் மொத்த உருவத்தையும் அழிக்கா விட்டாலும், அலறியடிக்க ஓடவிடும் விக்கிலீக்கை எத்தனை பாராட்டினாலும் தகும்.

இவர்களின் கொள்கையே மிக வித்தியாசமாகவும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் இருக்கிறது, குற்றம் செய்தவர்களைத் தவிர. உண்மை எதுவென தெரிந்தும் அதை மறைக்கும் தரங்கெட்ட ஊடகங்களுக்கு இவர்களின் கொள்கைகள் ஒரு செருப்படி, முக்கியமாக நம் தமிழ் ஊடகங்கள். அரிதார அழகிகளுக்கும், கலைக் கூத்தாடிகளுக்கும், தரும் முக்கியத்துவத்தை காலத்திற்கு தேவையான சமநிலைக்கும், செய்திகளுக்கும் தருவதில்லை.

மேலும் அமெரிக்க அண்ணன்கள் பல சித்து வேலைகள் செய்து முடக்கிவிட்டனர் விக்கிலீக்கை, வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை உறுதிப் படுத்திவிட்டது விக்கிலீக், அடுத்த சில மணி நேரங்களிலேயே மற்றொரு ஐரோப்பிய டொமைனில் முளைத்து விட்டது விக்கிலீக்ஸ்.

இதை பார்க்கும் போது அண்ணன் காசி ஆனந்தனின் வரிகள் தான் ஞாபகம் வருகிறது..

விழ விழ எழுவோம்
விழ விழ எழுவோம்
ஒன்று விழ நாங்கள்
ஒன்பதாய் எழுவோம்...!!


அமெரிக்கா முடக்கிய இணையதள முகவரி http://wikileaks.org/
மீண்டும் முளைத்திருக்கும் விக்கிலீக்ஸ்ன் முகவரி http://wikileaks.ch/

இதற்க்கு நன்கொடை சேவை செய்துவந்த paypal லும் தன் சேவையை நிறுத்தி விட்டதாக தற்போது கிடைத்த செய்தி.

எத்தகைய வைரஸ் தாக்குதல் ஏவப்பட்டாலும் எப்படி பாதுக்காப்பது என தெரியும் என்கிறது விகிலீக்ஸ். இதற்க்கு செய்தி திரட்டி கொடுத்தவர்கள் மட்டும் எவ்வித தொல்லைகளுக்கும் ஆட்படாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

உண்மைகள் என்றுமே தாமதமாகுமே தவிர
மரணிப்பது இல்லை,
என்ற சான்றோரின் கூற்று சரியே.

உலகம் சமநிலை பெறவேண்டும்
உயர்வு தாழ்விலா நிலைவேண்டும்.


வாழிய தாய்த்தமிழ்

அன்புடன்
ஜெகதீஸ்வரன்.இரா

3 comments: