Friday, October 22, 2010

புல்வெளி சொல்லிய பாடம்.



நாளைய ஏக்கம் இல்லை;
நேற்றைய தாக்கம் இல்லை;
நிதர்சன நிமிடங்களுடன்,
நிலையற்ற புல்வெளி...!!

காற்றுடன் காதல் இல்லை;
அதை எதிர்த்து வாழ்வுமில்லை;
அசைந்தே அகம் மகிழும்,
அழகான புல்வெளி...!!

மிதித்து நடந்தேன் காயமில்லை;
வெட்டி எறிந்தேன் கோபமில்லை;
என் கண்ணீரை மட்டும்
தாங்கிப் பிடித்து,
கருணை காட்டிய புல்வெளி...!!

ஒற்றை அனாதைக்கு
ஒரு கோடி சொந்தமென,
சில நிமிடங்கள் உறவாடிய;
பாசப் பச்சைப் புல்வெளி...!!

கிடைக்கும் தோல்விகள்
வரம் என்று,
மிதித்ததும் துடித்தெழுந்த;
துவண்டுபோகாப் புல்வெளி...!!

பாவப் பட்ட மனிதன் நடந்த
ஒற்றையடிப் பாதையில் மட்டும்,
முளைக்காமல் முறைத்துக்கொண்ட
தன்மானப் புல்வெளி...!!









வாழிய தாய் தமிழ்
அன்புடன் 
ஜெகதீஸ்வரன்.இரா
 

1 comment: